சிங்களத்தின் நீதியற்ற செயலினால் தங்களை தாங்களே அழித்த மாவீரர்கள் நினைவில்.
சமாதான உடன்படிக்கை காலத்தில் 2003.02.07 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலினாலும் தங்களை தாங்களே இருப்புடன் அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சுதன் (ஆற்றலோன்), கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன், கடற்கரும்புலி மேஜர் அன்பன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


















































































