1986.06.27 “லெப்டினன்ட் மொட்டைக்கஜன்” மட்டக்களப்பு புலிபாய்ந்தகல்லில் எமது முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு

லெப்டினன்ட் மொட்டைக்கஜன்
அழகரத்தினம் மணிவண்ணன்
கல்லடி வீதி, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு: 19.06.1962
வீரச்சாவு:-27.06.1986

நிகழ்வு: மட்டக்களப்பு புலிபாய்ந்தகல்லில் எமது முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு

இயக்கத்தின் பொருளாதாரத் தேவையில் அக்கறை காட்டிய லெப்டினன்ட் மொட்டைக்கஜன்.

மட்டக்களப்புச் சென்றடைந்ததும் தங்களால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளைக் களவாடிக்கொண்டு தப்பித்தவர்களைக் கண்டான். அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டுவந்தது. “பிரச்சினை இன்னும் தீரவில்லை . நாங்கள் ஒரு விரும்பாத சூழ்நிலையில் சந்திக்க வேண்டிவரும்” என்று சொன்னான். இயக் கக்கட்டுப்பாடு கருதி மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் அவன் ஈடுபடவில்லை .

ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போதும் ஒரு குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்றான். அத்தாக்குதல் மூலம் கிடைக்கப் பெற்ற ஆயுதங்களை அணைத்தபடியே ஆனந்தக் கூத்தாடினான். இந்த விடயத்தில் அவன் சிறுபிள்ளைதான். தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க அவனுக்கு வேறுவழி தெரியவில்லை .

மட்டக்களப்பில் இயக்கத்தின் உணவுத் தேவையையும் பொருளாதாரத் தேவையையும் கருதி மேற்கொள்ளப்பட்ட விவசாயச் செய்கையில் கூடியளவு அக்கறை காட்டினான். இரவு பகல் ‘வித்தியாசமில்லாமல் உழவு இயந்திரத்துடன் உழைத்துக் கொண்டிருந்தான். அனாலும் போர்க்களங்கள் என்றால் அங்கு செல்வதற்கு துடியாய்த்துடித்தான்.

இறுதியில் 27-06-86 அன்று புலி பாய்ந்த கல்லில் நிகழ்ந்த இராணுவ முற்றுகை இவனை எம்மிடமிருந்து பிரித்தது. எமது முகாமை முற்றுகையிடுவதென்றால் அது இலேசான காரிய மல்ல என்பதை உணர்த்திவிட்டே மடிந்தான்.

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

Leave a Reply

Discover more from தமிழீழ அரசியல்துறை

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading